சிலருக்கு வாழ்வில் எதற்கெடுத்தாலும் தடை, சீக்கிரம் திருமணம் நடக்காமல், நடந்தாலும் மனைவியுடன் ஒற்றுமையில்லாமை, குழந்தை இல்லாமை, வேலை இல்லாமை போன்ற அனைத்துமே இருக்கும். சில பெண்களுக்கு வயதானாலும் திருமணம் நடக்க விடாமல் ஏதாவது தடைகள் இருந்து கொண்டே இருக்கும்.
ராகு, கேதுவால் ஏற்படும் நாகதோஷமும், பிரம்மஹத்தி தோஷம் போன்ற அனைத்தும் சேர்ந்து இருந்தால் மேற்கண்ட பிரச்சினைகள் அனைத்துமே சேர்ந்து ஒருவரது வாழ்வை நிலைகுலைய வைத்துவிடும். அப்படிப்பட்டவர்கள் செய்ய வேண்டிய சக்தி வாய்ந்த கோயில் பரிஹாரம் இது. இவர்கள் நேராக காளஹஸ்தி சென்று அங்கு அதற்க்குரிய பரிஹார பூஜை செய்து விட்டு அங்கிருந்து நேராக வேறு எந்த கோவிலுக்கும் செல்லாமல் கும்பகோணம் அருகில் உள்ள திருநாகேஸ்வரம் செல்ல வேண்டும்.
அங்கு ராகு கால நேரத்தில் நடக்கும் பரிஹார பூஜையில் கலந்து விட்டு அன்று வேறு எங்கும் செல்லாமல் கும்பகோணத்திலேயே தங்கி விட வேண்டும். மறுநாள் எழுந்து திருவிடை மருதூர் கோவிலுக்கு சென்று பிரம்மஹத்தி பரிஹாரம் செய்து அங்குள்ள மகாலிங்கரை வணங்கி அங்குள்ள சுவாமிக்கும், மூகாம்பிகைக்கும் பெரிய மாலை ஒன்று வாங்கி சாற்ற வேண்டும்.
பின்பு வேறு எந்த கோவிலும் செல்லாமல் நேராக வீட்டுக்கு வந்துவிடவேண்டும். இந்த மூன்று கோவில்களை 5 நாட்களுக்குள் மேற்சொன்ன வரிசைப்படி காளஹஸ்தி, திரு நாகேஸ்வரம், திருவிடை மருதூர் என்று வரிசையாக தரிசிக்க வேண்டும். ஒரு நாள் ஒரு கோவில்தான் செல்ல வேண்டும். வேறு கோவில் எங்கும் செல்லக்கூடாது.
உங்களது சூழ்நிலைகளை பொறுத்து 5 நாட்களுக்குள் தரிசனத்தை முடித்தால் சிறப்பு. இப்படி செய்தால் ஒரு வருடங்களுக்குள் கண்டிப்பாக ஏதாவது சிறு மாற்றமாவது உங்கள் வாழ்வில் வந்து சேரும் என்பது நிச்சயம். சக்தி வாய்ந்த பரிஹாரம் இது. கொஞ்சம் முயற்சி செய்து பாருங்கள்
சிலருக்கு வாழ்வில் எதற்கெடுத்தாலும் தடை, சீக்கிரம் திருமணம் நடக்காமல், நடந்தாலும் மனைவியுடன் ஒற்றுமையில்லாமை, குழந்தை இல்லாமை, வேலை இல்லாமை போன்ற அனைத்துமே இருக்கும். சில பெண்களுக்கு வயதானாலும் திருமணம் நடக்க விடாமல் ஏதாவது தடைகள் இருந்து கொண்டே இருக்கும். ராகு, கேதுவால் ஏற்படும் நாகதோஷமும், பிரம்மஹத்தி தோஷம் போன்ற அனைத்தும் சேர்ந்து இருந்தால் மேற்கண்ட பிரச்சினைகள் அனைத்துமே சேர்ந்து ஒருவரது வாழ்வை நிலைகுலைய வைத்துவிடும். அப்படிப்பட்டவர்கள் செய்ய வேண்டிய சக்தி வாய்ந்த கோயில் பரிஹாரம் இது. இவர்கள் நேராக காளஹஸ்தி சென்று அங்கு அதற்க்குரிய பரிஹார பூஜை செய்து விட்டு அங்கிருந்து நேராக வேறு எந்த கோவிலுக்கும் செல்லாமல் கும்பகோணம் அருகில் உள்ள திருநாகேஸ்வரம் செல்ல வேண்டும். அங்கு ராகு கால நேரத்தில் நடக்கும் பரிஹார பூஜையில் கலந்து விட்டு அன்று வேறு எங்கும் செல்லாமல் கும்பகோணத்திலேயே தங்கி விட வேண்டும். மறுநாள் எழுந்து திருவிடை மருதூர் கோவிலுக்கு சென்று பிரம்மஹத்தி பரிஹாரம் செய்து அங்குள்ள மகாலிங்கரை வணங்கி அங்குள்ள சுவாமிக்கும், மூகாம்பிகைக்கும் பெரிய மாலை ஒன்று வாங்கி சாற்ற வேண்டும்.
பின்பு வேறு எந்த கோவிலும் செல்லாமல் நேராக வீட்டுக்கு வந்துவிடவேண்டும். இந்த மூன்று கோவில்களை 5 நாட்களுக்குள் மேற்சொன்ன வரிசைப்படி காளஹஸ்தி, திரு நாகேஸ்வரம், திருவிடை மருதூர் என்று வரிசையாக தரிசிக்க வேண்டும். ஒரு நாள் ஒரு கோவில்தான் செல்ல வேண்டும். வேறு கோவில் எங்கும் செல்லக்கூடாது. உங்களது சூழ்நிலைகளை பொறுத்து 5 நாட்களுக்குள் தரிசனத்தை முடித்தால் சிறப்பு. இப்படி செய்தால் ஒரு வருடங்களுக்குள் கண்டிப்பாக ஏதாவது சிறு மாற்றமாவது உங்கள் வாழ்வில் வந்து சேரும் என்பது நிச்சயம். சக்தி வாய்ந்த பரிஹாரம் இது. கொஞ்சம் முயற்சி செய்து பாருங்கள்
|