Bairava Tamil   Bairava English Make a Donation  Questions and Answers   |   Visit Users Comments   | New Register?   |   Forgot Password?     
Enlightend life www.swarnabhairavapeedam.org Astrology Enriched life
இன்றைய நாள் - தமிழ் பஞ்சாங்கம் கால் பெருவிரலும் சிதம்பர நடராஜர் கோவில் ரகசியமும்
Login
  User Name 
  Password  
  
Bairava English More Details about Vijaai swamiji.. Astrology Services Donate for HIV Services
பைரவஜோதி நிகழ்ச்சியை Vasanth TV - யில் செவ்வாய்க்கிழமை தோறும் மாலை 6.30 மணிக்கு காணத் தவறாதிர்கள்...
கோவில் திருப்பணிகள் Daily Events Vijaai swamiji Audio's Daily News HIV குழந்தைகள் காப்பகம்
Bairava News << BACK
Short Discription :
தீர்க்கசுமங்கலி பாக்கியம் பெறுங்கள்!!!
Bairava News

 

பாபநாசம் சித்திரை விசு உற்சவம் ஆரம்பம்
'தஞ்சையில் தடுக்கி விழுந்தால் கோவில், திருநெல்வேலியில் திரும்பிப் பார்க்கும் இடமெல்லாம் கோவில்' என்று ஒரு சொலவடையே உண்டு. அத்தகைய திருநெல்வேலியில், தாமிரபரணிக் கரையில் உள்ள கோவில்களில் புகழ் மிக்கது பாபநாசம் பாபநாசநாதர் கோவில். திருநெல்வேலியில் இருந்து, 45 கி.மீ., தூரத்தில் இக்கோவில் உள்ளது. இங்கு, சித்திரை விசு திருவிழா பிரம்மோற்சவமாக நடத்தப்படுகிறது.
அசுர குரு சுக்ராச்சாரியாரின் மகன் துவஷ்டாவை, குருவாக ஏற்றான் இந்திரன். ஆனால், துவஷ்டா, அசுரர்கள் நலனுக்காக யாகம் நடத்தவே, கோபமுற்ற இந்திரன், அவனைக் கொன்று விட்டான். உலகில் மிகக்கொடிய பாவமான குரு தோஷத்துக்கு ஆளான இந்திரன், தேவர்களின் குருவான வியாழன் ஆலோசனைபடி, தாமிரபரணி கரைக்கு வந்தான். அந்நதியில் நீராடி, பாபநாசநாதரை வழிபட்டு பாவம் நீங்கப் பெற்றான். இந்திரனின் பாவத்தை போக்கியதால் சிவனுக்கு, பாபவிநாசர் என்ற பெயர் ஏற்பட்டது.
'விநாசம்' என்றால், முழுமையாக அழித்தல்; இதுவே, பிற்காலத்தில், 'பாபநாசர்' என மருவி, இவ்வூருக்கு, பாபநாசம் என்ற பெயர் ஏற்பட்டது. காவிரி நதியை உருவாக்கிய அகத்தியர், தன் கமண்டலத்தில் மீதமிருந்த தீர்த்தத்தை, பொதிகை மலையில் ஊற்ற, அதுவே, தாமிரபரணி நதியாக பெருக்கெடுத்தது.
புனிதமான இந்நதியின் கரையில், சிவபூஜை செய்ய வேண்டுமென விரும்பிய அகத்தியரின் சீடர் உரோமசர், அதற்குரிய இடங்களை தேர்ந்தெடுத்து தரும்படி தன் குருவிடம் கேட்டார்.
அகக்தியரும் தான் சிவ பூஜை செய்த மலர்களை உரோமசரிடம் கொடுத்து, அவற்றை தாமிரபரணியில் வீசும்படி சொல்லி, அவை கரை ஒதுங்கும் இடங்களில் சிவனை பூஜிக்கும்படி கூறினார்.
அதன்படி, தாமிரபரணியில் வீசப்பட்ட மலர்கள் கரை ஒதுங்கிய ஒன்பது இடங்களில் உரோமசர், சிவலிங்க பிரதிஷ்டை செய்து வழிபட்டார். இவை, 'நவ கைலாய தலங்கள்' எனப்பட்டன. இதில், முதல் தலம் பாபநாசம்.
இங்குள்ள உலகம்மை சன்னிதி முன், ஒரு உரல் இருக்கிறது. கன்னிப்பெண்கள் நல்ல வரன் அமையவும், திருமணமான பெண்கள் தீர்க்க சுமங்கலியாக இருக்கவும் இதில், விரலி (நீள)மஞ்சளை இட்டு இடிக்கின்றனர். இந்த மஞ்சள் பொடியை நெற்றியில் இட்டுக்கொண்டால், தங்கள் கோரிக்கை நிறைவேறும் என, நம்புகின்றனர்.
பொதிகையில் உருவாகி, மலைகளில் விழுந்து வரும் தாமிரபரணி, இக்கோவில் முன் ஓடுகிறது. தினமும் மதியம், சிவனுக்கு படைத்த நைவேத்யத்தை நதியில் இட்டு பூஜை செய்கின்றனர். கருவறையில் சிவன், ருத்ராட்ச லிங்கமாக காட்சி தருகிறார். ரிக், யஜுர், சாம வேதங்கள் கிளா மரமாக மாறி, இங்கு, சிவனுக்கு நிழல் தருவதாக நம்பிக்கை. எனவே, சிவனுக்கு, 'முக்கிளா லிங்கர்' என்றும் பெயர் உண்டு. அகத்தியர், தன் மனைவி உலோபமுத்திரையுடன் சிவனின் திருமணத்தை தரிசிக்கும் சன்னிதி இங்குள்ளது.
இங்கு, சித்திரை விஷு திருவிழா விசேஷம். விஷுவன்று, உலகிலுள்ள அனைத்து தீர்த்த தேவதைகளும், தாமிர பரணியில் நீராட வருவதாக ஐதீகம். அன்று நள்ளிரவில், அகத்தியருக்கு, சிவபார்வதி திருமணக் காட்சி தரும் நிகழ்ச்சி நடக்கும். விஷுவுக்கு, 10 நாட்கள் முன், கோவிலில் கொடியேற்றம் நடைபெறும். தினமும், சுவாமி, அம்பாள் பவனி உண்டு.
பாபநாசநாதர், உலகம்மை திருமணக் காட்சியை வழிபட்டு, தீர்க்கசுமங்கலி பாக்கியம் பெறுங்கள்.

பாபநாசம் சித்திரை விசு உற்சவம் ஆரம்பம்
'தஞ்சையில் தடுக்கி விழுந்தால் கோவில், திருநெல்வேலியில் திரும்பிப் பார்க்கும் இடமெல்லாம் கோவில்' என்று ஒரு சொலவடையே உண்டு. அத்தகைய திருநெல்வேலியில், தாமிரபரணிக் கரையில் உள்ள கோவில்களில் புகழ் மிக்கது பாபநாசம் பாபநாசநாதர் கோவில். திருநெல்வேலியில் இருந்து, 45 கி.மீ., தூரத்தில் இக்கோவில் உள்ளது. இங்கு, சித்திரை விசு திருவிழா பிரம்மோற்சவமாக நடத்தப்படுகிறது.அசுர குரு சுக்ராச்சாரியாரின் மகன் துவஷ்டாவை, குருவாக ஏற்றான் இந்திரன். ஆனால், துவஷ்டா, அசுரர்கள் நலனுக்காக யாகம் நடத்தவே, கோபமுற்ற இந்திரன், அவனைக் கொன்று விட்டான். உலகில் மிகக்கொடிய பாவமான குரு தோஷத்துக்கு ஆளான இந்திரன், தேவர்களின் குருவான வியாழன் ஆலோசனைபடி, தாமிரபரணி கரைக்கு வந்தான். அந்நதியில் நீராடி, பாபநாசநாதரை வழிபட்டு பாவம் நீங்கப் பெற்றான். இந்திரனின் பாவத்தை போக்கியதால் சிவனுக்கு, பாபவிநாசர் என்ற பெயர் ஏற்பட்டது.'விநாசம்' என்றால், முழுமையாக அழித்தல்; இதுவே, பிற்காலத்தில், 'பாபநாசர்' என மருவி, இவ்வூருக்கு, பாபநாசம் என்ற பெயர் ஏற்பட்டது. காவிரி நதியை உருவாக்கிய அகத்தியர், தன் கமண்டலத்தில் மீதமிருந்த தீர்த்தத்தை, பொதிகை மலையில் ஊற்ற, அதுவே, தாமிரபரணி நதியாக பெருக்கெடுத்தது.புனிதமான இந்நதியின் கரையில், சிவபூஜை செய்ய வேண்டுமென விரும்பிய அகத்தியரின் சீடர் உரோமசர், அதற்குரிய இடங்களை தேர்ந்தெடுத்து தரும்படி தன் குருவிடம் கேட்டார்.அகக்தியரும் தான் சிவ பூஜை செய்த மலர்களை உரோமசரிடம் கொடுத்து, அவற்றை தாமிரபரணியில் வீசும்படி சொல்லி, அவை கரை ஒதுங்கும் இடங்களில் சிவனை பூஜிக்கும்படி கூறினார்.அதன்படி, தாமிரபரணியில் வீசப்பட்ட மலர்கள் கரை ஒதுங்கிய ஒன்பது இடங்களில் உரோமசர், சிவலிங்க பிரதிஷ்டை செய்து வழிபட்டார். இவை, 'நவ கைலாய தலங்கள்' எனப்பட்டன. இதில், முதல் தலம் பாபநாசம்.இங்குள்ள உலகம்மை சன்னிதி முன், ஒரு உரல் இருக்கிறது. கன்னிப்பெண்கள் நல்ல வரன் அமையவும், திருமணமான பெண்கள் தீர்க்க சுமங்கலியாக இருக்கவும் இதில், விரலி (நீள)மஞ்சளை இட்டு இடிக்கின்றனர். இந்த மஞ்சள் பொடியை நெற்றியில் இட்டுக்கொண்டால், தங்கள் கோரிக்கை நிறைவேறும் என, நம்புகின்றனர்.பொதிகையில் உருவாகி, மலைகளில் விழுந்து வரும் தாமிரபரணி, இக்கோவில் முன் ஓடுகிறது. தினமும் மதியம், சிவனுக்கு படைத்த நைவேத்யத்தை நதியில் இட்டு பூஜை செய்கின்றனர். கருவறையில் சிவன், ருத்ராட்ச லிங்கமாக காட்சி தருகிறார். ரிக், யஜுர், சாம வேதங்கள் கிளா மரமாக மாறி, இங்கு, சிவனுக்கு நிழல் தருவதாக நம்பிக்கை. எனவே, சிவனுக்கு, 'முக்கிளா லிங்கர்' என்றும் பெயர் உண்டு. அகத்தியர், தன் மனைவி உலோபமுத்திரையுடன் சிவனின் திருமணத்தை தரிசிக்கும் சன்னிதி இங்குள்ளது.இங்கு, சித்திரை விஷு திருவிழா விசேஷம். விஷுவன்று, உலகிலுள்ள அனைத்து தீர்த்த தேவதைகளும், தாமிர பரணியில் நீராட வருவதாக ஐதீகம். அன்று நள்ளிரவில், அகத்தியருக்கு, சிவபார்வதி திருமணக் காட்சி தரும் நிகழ்ச்சி நடக்கும். விஷுவுக்கு, 10 நாட்கள் முன், கோவிலில் கொடியேற்றம் நடைபெறும். தினமும், சுவாமி, அம்பாள் பவனி உண்டு.பாபநாசநாதர், உலகம்மை திருமணக் காட்சியை வழிபட்டு, தீர்க்கசுமங்கலி பாக்கியம் பெறுங்கள்.

 

 
இன்றைய நாள் - தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய நாள் எப்படி 17.11.2023 தமிழ் பஞ்சாங்கம் இன்றைய நாள் எப்படி 17.11.2023 தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய நாள் எப்படி 11.11.2023 தமிழ் பஞ்சாங்கம் இன்றைய நாள் எப்படி 11.11.2023 தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய நாள் எப்படி 10.11.2023 தமிழ் பஞ்சாங்கம் இன்றைய நாள் எப்படி 10.11.2023 தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய நாள் எப்படி 09.11.2023 தமிழ் பஞ்சாங்கம் இன்றைய நாள் எப்படி 09.11.2023 தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய நாள் எப்படி 08.11.2023 தமிழ் பஞ்சாங்கம் இன்றைய நாள் எப்படி 08.11.2023 தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய நாள் எப்படி 07.11.2023 தமிழ் பஞ்சாங்கம் இன்றைய நாள் எப்படி 07.11.2023 தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய நாள் எப்படி 06.11.2023 தமிழ் பஞ்சாங்கம் இன்றைய நாள் எப்படி 06.11.2023 தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய நாள் எப்படி 04.11.2023 தமிழ் பஞ்சாங்கம் இன்றைய நாள் எப்படி 04.11.2023 தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய நாள் எப்படி 03.11.2023 தமிழ் பஞ்சாங்கம் இன்றைய நாள் எப்படி 03.11.2023 தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய நாள் எப்படி 02.11.2023 தமிழ் பஞ்சாங்கம் இன்றைய நாள் எப்படி 02.11.2023 தமிழ் பஞ்சாங்கம்
Jaya Plus TV Interview
புகைபடங்கள்
Temple Function
Temple Function
மேலும் ...
வீடியோ படங்கள்
cancer video
cancer video
cancer video
temple
cancer
temple
மேலும் ...